நெல்லையில் காருக்குள் விளையாடிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பணகுடி லெப்பை குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இன்று 3 குழந்தைகள் ஏறி விளையாடியுள்ளனர். அப்போது கதவை திறக்க தெரியாமல் 3 குழந்தைகளும் காருக்குள் சிக்கிகொண்டதில், நித்திஷா (7), நித்திஷ் (5), கபிலன் (4) ஆகிய 3 குழந்தைகளும் மூச்சித்திணறி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 3 குழந்தைகளின் உடல்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு பணகுடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பணகுடி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.