உதகை, ஜூன் 7- கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பிற்கு உரிய நிவார ணம் வழங்கிட வேண்டுமென நீலகிரி சுற்றுலா வழகாட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி பல தொழில்கள் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோரும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசன் மற்றும் அக் டோபர், நவம்பர் மாதங்களில் இரண் டாவது சீசனின் போது நடைபெறுகை யில் ஏராளமான சுற்றுலா பய ணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரு வது வழக்கம். அதேபோல் அரசு விடு முறை நாட்களிலும் சுற்றுலா பயணி கள் அதிகம் கூடுவர். இந்த சுற்றுலா சீசன்களையும், சுற்றுலாப் பயணி களையும் நம்பியே மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வழி காட்டிகள் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரியின் அனைத்து முக்கிய சுற் றுலா பகுதிகளுக்கும் பயணிகளை அழைத்து சென்று மகிழ்விப்பவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள்.
தற்போது கொரோனா ஊரடங்கால் இவர்களின் வாழ்கை முற்றிலும் முடங்கி வாழ் வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வருகிறேன். மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட முடியும். தற்போது கொரோனா ஊரடங்கு கார ணமாக சுற்றுலா ஸ்தலங்கள் அனைத் தும் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள் ளது. இதனால் கடந்த இரண்டு மாதத் திற்கு மேலாக வேலை இழந்து வரு மானம் இல்லாமல் குடும்பம் நடத்த முடி யாமல் கஷ்டப்படுகிறோம். எங்க ளுடைய வாழ்கையை பாதுகாக்க அரசு எந்தவொரு திட்டமும் அறிவிக்காம லும், நிவாரணமும் வழங்கமாலும் மெளனம் காத்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் சுற்றுலாவுக்கு அளிக்க இன்னும் பல மாதங்கள் கூட ஆகும் நிலைமை உள்ளது. இந்நிலையில், இந்த இக்கட்டனா சூழலில் அரசு எங்க ளுக்கு உதவவில்லை என்றால் பிச்சை எடுப்பதை தவிர வேறுவழி இல்லை என்று கண்ணீர் மல்க கூறினார்.