tamilnadu

துபாயில் சிக்கியவரை உதகைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்திடுக மத்திய அமைச்சருக்கு ஆ.ராசா எம்.பி., கடிதம்

உதகை, ஜூன் 6- கொரோனா ஊரடங்கால் துபாயில் சிக்கி தவித்து வரும் உதகையைச் சேர்ந்தவரை நாடு திரும்ப உதவ வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட் டம், உதகை, காந்தல் பகுதியை சேர்ந்த பி.சூரிய பிரகாஷ் என்பவர்  துபாயில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது, கொரோனா காரண மாக தனது பணியை இழந்து விட்டார். இதன் காரணமாக அவர் எந்தவித உதவியும் இல்லாமல் சொந்த ஊர் திரும்ப முடியாமல் துபாயில் சிக்கி தவித்து வருகிறார். எனவே, மனிதாபிமான முறை யில் அவரை துபாயிலிருந்து உதகை திரும்ப உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

;