tamilnadu

img

டேக்வான்டோ: தங்கம் வென்ற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

உதகை, ஜன. 28- சென்னையில் நடைபெற்ற மாநில அள விலான, 20 வது டேக்வான்டோ போட்டி யில் வெற்றி பெற்ற ஏசியன் பள்ளி மாண வர்களுக்கு உற்சாக உதகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.     சென்னையில் மாநில அளவிலான 20  வது டேக்வான்டோ போட்டி ஜன 25, 26ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் நீல கிரி மாவட்டம், உதகையில் உள்ள ஏசியன் டேக்வாண்டா பள்ளியைச் சேர்ந்த 34 மாணவர்கள் கலந்து கொண்டனர். இம் மாணவர்கள் 19 தங்கம், 4 வெள்ளி, 6  வெண்கலம் என 29  பதக்கங்களை வென் றனர். இதில் தங்கம் வென்ற 19 பேரும் தேசிய  அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் செவ்வாயன்று உதகை வந்த அவர்களுக்கு மத்திய பேருந்து நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதகை அரசு  கலைக்கல்லூரியின் முதல்வர் ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாணவர்களுக்கு டேக்வான்டா வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

;