உதகை, அக்.4- நெடிகாடு கிராமத்தில் சமு தாயக்கூடம் அமைத்திட வலியு றுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், அதி கரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமம் நெடிகாடு. இப்பகுதி யில் தலித் சமூகத்தை கூலித் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைத்திட 12 ஆண்டுகளுக்கு முன்பு அதி கரட்டி பகுதியைச் சார்ந்த பிரமுகர் ஒருவர் பேரூராட்சிக்கு 20 சென்ட் நிலத்தை பத்திரப் பதிவு செய்து தானமாக வழங் கினார். ஆனால், அந்த நிலத் தில் சமுதாயக்கூடம் அமைத் திட சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பலமுறை மனுக்கள் அளித்தும், பல கட்ட போராட்டங் கள் நடத்தியும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னூர் இடை கமிட்டி செயலாளர் ஜே.ஆல்தொரை தலைமையில் குன்னூர் கோட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை சார் ஆட்சியர் ரஞ்சித் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். முடிவில் தானமாக வழங் கப்பட்ட நிலத்தினை பட்டா மாறு தலுக்கான உட்பிரிவு ஆணையை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினார். பேச்சுவார்த்தையின் போது குன்னூர் வட்டாட்சியர் தினேஷ், கோட்டாட்சியரின் நேர்முக உத வியாளர் ஆர்.குமார ராஜா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர் வாகிகள் பொ. இராமன் குட்டி, நடராஜ்,நெடி காடு ஊர் தலைவர் ராஜேந்திரன், சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் லோகநாதன், செல்வகுமார், பாலன், குட்டி ஆகி யோர் உடன் இருந்தனர்.