tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெறுக அகில இந்திய தாயகம் திரும்பியோர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

உதகை, மார்ச் 1- மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய தாயகம் திரும்பி யோர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அகில இந்திய தாயகம் திரும்பி யோர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்பு கூட்டம் ஞாயிறன்று கோத்தகிரியில் உள்ள நாவா அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலை வர் தம்பிராஜா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.மகேஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்த சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத் தச் சட்டத்தை திரும்பப்பெற வேண் டும். தாயகம் திரும்பியோர் அனைவ ரும் ரெப்கோ வங்கியில் உறுப்பி னராக வேண்டும். எம்பி, எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து சமபாதி நிதியை தாயகம் திரும்பியோர் குடி யிருப்புப் பகுதிகளின் மேம்பாட்டிற்கு வழங்க வேண்டும். டேன் டீ நிறுவ னத்தை புணரமைத்து, தொழிலாளர் களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதில், ரெப்கோ வங்கி பேரவைப் பிரதிநிதி கிருஷ்ணன், மகளிர் அமைப் புத்தலைவர் கோமளா தேவி, செய லாளர் சுசிலா தேவி, திலகவதி உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.