உதகை, அக்.24- உதகை அருகே உள்ள கோடப்பமந்து டாக்டர் அம்பேத்கர் காலனியில் ஏற்பட் டுள்ள மண் சரிவை அகற்ற மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உதகை நகராட்சிக்கு உட்பட்ட கோடப் பமந்து டாக்டர் அம்பேத்கர் காலனி உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் வசிக்கிறார்கள். கடந்த ஞாயிறன்று (அக்.20) பெய்த கன மழையால் இப்பகுதியில் மண் சரிவு ஏற் பட்டு 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந் துள்ளது. பல இடங்களில் நடைபாதை களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஞாயிறன்று பெய்த கனமழை யால் இப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துவிட்டது. நடைபாதைகளிலும் மண் சரிவு ஏற் பட்டு நடப்பதற்கே மிகவும் சிரமப்படு கிறோம். மேலும், தெருவிளக்குகளும் சரி யாக எரிவதில்லை. காட்டு எருமைகளின் நட மாட்டமும் அதிக அளவில் உள்ளது. இங்கு அதிகாரிகள் யாரும் வருவதேயில்லை. எனவே, எங்கள் பகுதியில் மண் அரிப்பு தடுப்பு சுவரையும், நடைப்பாதையையும் ஏற்படுத்தி கொடுத்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாது. எனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி விக்கின்றனர்.