tamilnadu

பந்தலூர் அரசு மருத்துவமனையை சீரமைக்க கோரிக்கை

உதகை, அக். 16- பந்தலூர் அரசு மருத்து வமனையை சீரமைக்க சுகாதாரத்துறை அமைச்ச ருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் கி. காளிமுத்து, செயலாளர் சு.சிவசுப்ரமணியம் ஆகி யோர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு அனுப்பி யுள்ள மனுவில் தெரிவித்தி ருப்பதாவது, பந்தலூர் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தை புதுப் பித்து புதிய கட்டிடம் கட்டிட வேண்டும். நோயாளிக ளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கிட போதிய மருத்துவர்கள், செவிலியர் கள், ரத்த பரிசோதகர் உள் ளிட்ட பணியாளர்களை நிய மிக்க வேண்டும். பிரசவம் பார்க்க உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு மூன்று வேலையும், சத்தான உண வுகள் வழங்கிட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.