tamilnadu

வெறிநாய்களை பிடிக்க கோரிக்கை

உதகை,செப். 10 - உதகை அருகே பொது மக்களை அச்சுறுத்தி வரும் வெறிநாய்களை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். உதகை நகராட்சிக்கு உட்பட்ட 33 ஆவது வார்டில் நொண்டி மேடு, நேருஜி நகர், ராமதாஸ் நகர் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன.  இந்நிலையில், சமீபகாலமாக இப்பகுதி யில் வெறிநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத னால், அப்பகுதி மக்கள் வெளியில் நடமாடுவதற்கு கூட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித் தும் இதுவரை உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை. ஆகவே,பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெறிநாய் களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;