tamilnadu

img

உதகையில் ரத்ததான முகாம்

உதகை, பிப். 1- கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், கூடலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, நெலாக்கோட்டை சமு தாய சுகாதார நிலையம், சிபிடி ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அமைப்புகள் இணைந்து தொரப்பள்ளி ஜிடிஆர் பள்ளியில் சனியன்று ரத்ததான முகாமினை நடத்தின. இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். நுகர்வோர் பாது காப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், துணை தலை வர் ராஜா, நேரு யுவகேந்திரா கூடலூர் பகுதி ஓருங்கிணைப் பாளர் பூபாலன், பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன், சிபிடி யூத் கிளப் தலைவர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மேலும், மன்ற செயலாளர் சுகைல் வரவேற்றார். கூடலூர் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் முனிவேல், ஹரி, ரெஸ்சினா உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவி னர் ரத்தம் சேகரித்தனர். இம்முகாமில் 25 பேர் ரத்த தானம் செய்தனர். சேகரிக்கப்பட்ட ரத்தம் கூடலூர் அரசு மருத்துவ மனையில் உள்ள ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

;