tamilnadu

img

கால்வாயில் தடுப்பு சுவர் அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை

உதகை,பிப்.5- உதகை அருகே கால்வாயில் தடுப்பு சுவர் அமைத்திட  வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் குன்னூர் மார்க்கமாக செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் சுமார் 10 அடி  ஆழம் உள்ள கால் வாய் ஒன்று உள்ளது. இதற்கு தடுப்பு சுவர் ஏதும் அமைக் கப்படவில்லை. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பணிகளுக்கு செல்வோர் என எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். இந்நி லையில் இப்பகுதியிலுள்ள கால்வாய் திறந்த நிலை யிலே இருப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, கால்வாயை சுற்றி தடுப்பு சுவர் எழுப்ப  வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.