tamilnadu

img

ஆளுநர் ரவியை கண்டித்து உதகையில் ஆர்ப்பாட்டம்

           5 நாள் சுற்றுப்பயணமாக உதகை வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சிபிஐஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
  ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை 2 ஆவது முறையாக திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து உதகையில் ஆளுநர் தங்கியிருக்கும் மாளிகையை முற்றுகையிட்டு "டம்மி ரவி தமிழகத்திலிருந்து ஓடிப்போ" என முழக்கங்களிட்டு இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, ஒன்றிய அரசு ஆளுநர் ரவியை பொறுப்பிலிருந்து வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளார். பின்பு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளைச் சேர்ந்த 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 

;