tamilnadu

img

உதகை: வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவக்கம்

உதகை, நவ 17 - உதகை முதுமலை வனப்பகுதிக ளில் வனவிலங்கு கணக்கெடுப்புக் கான களப்பணியானது செவ்வா யன்று துவங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகத்தில் வெளிவட்ட வனப்ப குதிகளான சிங்காரா, சீகூர், தெங்கு மரஹடா ஆகிய வனச்சரகங்களில் 349  சதுர கிலோமீட்டர் வனப்பகுதிகளில் வனவிலங்கு கணக்கெடுப்பு களப்ப ணிகள் செவ்வாயன்று  துவங்கியது. வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 37 நேர்கோட்டு பகுதிகளில், 37 குழுக் களாக நூற்றுக்கும் மேற்பட்ட வனப்  பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடு பட்டு உள்ளனர். இதற்கான பயிற்சி திங்களன்று மசினகுடியில் புலிகள் காப்பக கள இணை இயக்குனர் ஸ்ரீகாந் மேற்பார்வையில் நடைபெற் றது.

முதுமலை புலிகள் காப்பக உள்வட்ட மற்றும் வெளிவட்ட வனப்ப குதிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் பருவமழைக்கு முந்தைய கணக்கெடுப்பு  பணிகளும், நவம்பர் மாதத்தில் பருவ மழைக்கு பிந்திய கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. வனப்பகு திகளில் வனவிலங்குகளின் நேரடி காட்சிகள், கால் தடயங்கள், எச்சங்கள்,  நக கீறல்கள் உள்ளிட்ட பல்வேறு  வகையான வழிகளில் இந்த கணக்கெ டுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், ஊர்வன மற்றும்  பறவைகள், மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்து வகைகளும் இந்த கணக்கெடுப்பில் அடங்குகின் றன.  இதில், சேகரிக்கப்படும் தகவல் கள் அனைத்தும் தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கு அளிக்கப்ப டுகிறது.