tamilnadu

உதகை மலர் கண்காட்சி இன்று துவக்கம்

உதகை, மே 16-நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வெள்ளியன்று (மே17) காலை 10 மணியளவில் 123 ஆவது மலர்க்காட்சியினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தொடங்கி வைக்கிறார். இவ்விழாவிற்கு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகபிரியா, தேயிலை வாரியசெயல்அலுவலர் சி.பால்ராசு, சிறப்பு பகுதி மேம்பாட்டுதிட்ட இயக்குநர்அமர்குஷ்வாஹா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.இம்மலர்காட்சியானது மே 17 ஆம் தேதியன்று தொடங்கி மே 21 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.

;