உதகை, செப். 26- உதகை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் உலக மருந்தா ளுநர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செப்.25 ஆம் நாள் சர்வதேச மருந்தாளுநர் தின மாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் வெள்ளி யன்று சர்வதேச மருந்தாளுநர் தினம் கொண்டா டப்பட்டது. ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்வில், இந்தியன் பார்மசூட்டிகள் அசோசியேசன் நீல கிரி கிளை தலைவர் வடிவேல், செயலாளர் கணேஷ், சங்க பொருளாளர், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.