tamilnadu

img

நீலகிரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழையின் காரணமாக நீலகிரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 

;