tamilnadu

img

காலிபணியிடங்களை நிரப்பிடுக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உதகை, ஜன. 27- வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிடக் கோரி வங்கி ஊழியர்கள் உதகையில் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நியாயமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத் தைக் கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண் டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்க ளின் கூட்டமைப்பினர் உதகையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஆர்.ராஜ்குமார், ஸ்டேட் வங்கி அதி காரிகள் சங்கத்தின் மண்டல செயலா ளர் ஜே.விஷ்ணு மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட் டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்கள் டி.கே. லோகேஷ்வரன், கஜேந்திரன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
சேலம் 
சேலம் கோட்டை பாரத ஸ்டேட்  வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வங்கி ஊழியர் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் சாமிநா தன் தலைமை வகித்தார். இதில், ஊழியர்கள் பிரச்சினைகள் குறித்து  இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலாளர் எஸ்.ஏ. ராஜேந்தி ரன், அதிகாரிகள் பிரச்சினைகள் குறித்து பால் பிரபாகர் விளக்க உரை யாற்றினார். இதில், கூட்டமைப்பு நிர்வாகிகள் தீனதயாளன், குணாலன், சம்பத், மணிகண்டன், உமாநாத் உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றனர்.

;