tamilnadu

img

கனமழையால் சாலையில் சரிந்த மரங்கள் அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர்

உதகை, ஆக. 13- நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சாலை யில் விழுந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆக. 3ஆம் தேதி முதல் ஆக.9ஆம் தேதி வரை கனமழையுடன் சூறாவளிக் காற்று வீசியது. இதனால், ஏராளமான மரங்கள் விழுந்து போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், குடியிருப்புகள் மீதும் விழுந்தன. உதகை – கூடலூர் சாலையில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன.

இது தவிர மஞ்சூர் சாலை, ஏற்காடு சாலை மற்றும் கிராமப்புறங்களுக்கு செல் லும் சாலை என மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராட்சத யூகலிப்டஸ், சீகை, குப்ரசசஸ் மரங்கள் விழுந்தன. இதையடுத்து பேரிடர் மீட்புப் பணிகளுக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிக ளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.