tamilnadu

img

நடைபாதையில் இடையூறாக குடிநீர் குழாய்கள்

உதகை, ஜன. 16- நடைப்பாதையில் இடையூறாக உள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை மார்க் கெட் பகுதியில் இருந்து அரசு தலைமை  மருத்துவமனைக்குச் செல்ல நடைபாதை ஒன்று உள்ளது. பி1 காவல்நிலையம் அருகே  உள்ள இந்த நடைபாதையை நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரு கின்றனர். இந்நடைபாதையில் ஏராளமான குடிநீர் குழாய்கள் உள்ளன. இதனால் நடப் பதற்கு இடையூறாக உள்ளது. பல்வேறு  விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.  எனவே பொதுமக்களுக்கு சிரமத்தை  ஏற்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ள மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;