tamilnadu

சாலையில் வீணாக ஓடும் குடிநீர் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உதகை, மார்ச் 14- நீலகிரி மாவட்டம், உதகை ரோஸ் கார்டன் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பல நாட்களாக வீணாக ஓடுகிறது.  நீலகிரி மாவட்டம் முழுவதும் மழை பொழிவு இல்லாததால் வறட்சி ஏற்பட்டு உள்ளது.  அணைகளின் நீர்மட்டமும் குறைந்து  சீசன் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் கடந்த பல நாட் களாக ரோஸ் கார்டன் சாலையில் ஜான் சுல்லிவன் கோர்ட் முன்புறம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர்  வீணாக சாலையில் ஓடுகிறது. இது  குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம்  புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படை யில் குடிநீர் குழாய் உடைப்பை சரி  செய்ய வேண்டும் என்று அப்பகுதி  பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

;