tamilnadu

img

தீபாவளி பண்டிகை: உதகை மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

உதகை, அக்.26- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உதகை மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.  தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்கிட சனியன்று உதகை மார்க்கெட் பகுதியில் காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர். வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பியி ருந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிர மத்திற்கு ஆளானார்கள். இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறும்போது, பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகம் கூடுவார்கள். ஆகவே,  வாகனங் களை நிறுத்துவதற்கு  மாவட்ட நிர்வாக மும், காவல்துறையினரும் போதிய நட வடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர். இதேபோல், காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, தக்காளி 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.80, பூண்டு ரூ.240 முதல் அதிகபட்சமாக 280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மல்லிகை பூ முழம் ஒன்று 100  ரூபாய்க்கும், சாமந்தி முழம் 50 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.