tamilnadu

img

சாலையின் ஓரத்தில் நிறுத்தபட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்திடுக காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

உதகை, மார்ச் 16- மஞ்சூர் மற்றும் எமரால்டு பகுதிகளில் சாலையின் ஓரத்தில் கேட்பாரற்று நிறுத்தபட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் தவ்லத் நிஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் கூறியி ருப்பதாவது, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் அறிவுறுத்தலின்படி, மஞ்சூர் மற்றும்  எமரால்டு காவல்நிலையத்திற்குட்பட்ட சாலையோரங்க ளில் கேட்பாரற்று அல்லது நீண்ட காலமாக நிறுத்தி வைக் கப்பட்டு இருக்கக்கூடிய வாகனங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாகன பழுதுபார்க்கும் நிலையங்களுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகனங்களையும் அப்புறப்படுத்த பணிமனை உரி மையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஒரு வார காலத்திற்குள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய வாகன உரிமையாளர் கள் தங்கள் வாகனங்களை உரியமுறையில் போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிறுத்திக் கொள்ள  அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு வாகன உரிமையாளர் கள் அப்புறப்படுத்தாவிட்டால் மேற்படி வாகனங்கள்  காவல்துறை மூலம் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்ப டும் என்றும், அவை ஏலத்தில் விடப்படு என்றும் கூறி யுள்ளார்.