tamilnadu

குடியிடிப்பை சூழ்ந்துள்ள சகதியை அப்புறப்படுத்த கோரிக்கை

உதகை, ஆக. 11 - கூடலூரில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகு தியில் புகுந்த வெள்ளத்தால் தேங்கியுள்ள சகதியை அகற்ற அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். நீலகிரி மாவட்டம், கூடலூர் கோழிக்கோடு சாலையில் அமைந்துள்ள பகுதியில் சுமார் ஐம்பதிற் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை யால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் அனைவரும் அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்களது வீடுக ளில் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் அனைத்தும் சேதமானது. மேலும், இப்பகுதி முழுவதும் சேறும், சக தியுமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் இப்பகுதி யில் தேங்கியுள்ள சகதியை அப்புறப்படுத்த அரசு நிர் வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.