உதகை,மார்ச் 4- கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட் டம் புதனன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்தி திட லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூடலூர் இடைக் கமிட்டிச் செயலாளர் எம்.ஏ.குஞ்ஞி முகமது தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என் .வாசு, ஜெ.ஆல் தொரை, ஏ.யோகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக் குழு உறுப்பினர் கே.பாலபாரதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாலக்காடு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சஜீவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, தில்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்கட்ட நிவாரணமாக கூடலூர் இடைக்கமிட்டியின் சார்பில் ரூ.11,500ஐ மாநிலக்குழு உறுப்பி னர் கே.பாலபாரதியிடம் வழங்கினர். மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் நிறைவு செய்து பேசினார். முடிவில் யோக சசி நன்றி கூறினார். முன்னதாக, இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.