tamilnadu

வங்கிகளில் இணையதளம் முடக்கம் - தோட்ட தொழிலாளர்கள் அவதி

உதகை, ஆக. 21 - பந்தலூரில் செயல்படும் வங்கிகளில் இணையதள முடக்கம் காரணமாக பணம் எடுக்கமுடியாமல் தோட்டத் தொழிலா ளர்கள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியை சுற்றிலும் 5க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தோட்ட நிர்வாகங்கள் தொழி லாளர்களின் ஊதியத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது.

இப்பகு தியில்  இந்தியன் வங்கி, கனரா வங்கி மற் றும் சவுத் இண்டியன் ஆகிய வங்கிகளும் இவற்றின் ஏடிஎம் மையங்களும்  உள்ளன. இந்த வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் தோட் டத் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக ளுக்கு பணம் எடுத்து வந்தனர்.  இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியா மல் தொழிலாளர்களும், பொதுமக்களும் அவதியடைந்தனர். இதுகுறித்து தொழிலா ளர்கள் வங்கி அதிகாரிகளிடம் கேட்கை யில், இணையதள இணைப்பு செயல்பட வில்லை என்று கூறுகின்றனர்.  இதனால் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்க ளில் பணம் எடுக்க  முடியாமல் மூன்று நாட்க ளுக்கும் மேலாக  அவசர தேவைக்காகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றோம் என தோட்டத் தொழிலாளர்கள்  கவலை தெரிவித்துள்ளனர்.