ஜம்மு-காஷ்மீரின் சோபூர் பகுதியில் புதனன்று காலை ரோந்து சென்ற மத்திய பாது காப்பு படைவீரர்கள் மீது பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்க ப்பட்டு வணிகர்கள் ஜெயராஜ்,பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4.50 வரை உயர்ந்துள்ளது.
பந்தை பளபளப்பு செய்ய முடியாவிட்டால் பவுலர் களின் திறமை பாதியாக குறைந்து விடும் என்று இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூறியுள்ளார்.
போலி இ- பாஸ் தயாரித்து பெங்களுருவில் இருந்து ஊட்டிக்கு வந்த பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. காணாமல் போன பெண் களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.
தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வதில் மாநில அரசு தலையிட முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை காவல் ஆணையர் எ.கே. விஸ்வ நாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்துள்ளது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங் களில் ஜூலை 5 ஆம் தேதி வரை விலை யில்லாமல் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.