tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று  அரசாங்க புள்ளிவிவரங்கள் தெரி வித்துள்ளன.

கால்பந்து போட்டியில் 700 கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பார்சலோனா அணி மற்றும் அர்ஜென்டினா நாட்டு அணி யின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி இடம் பிடித்துள்ளார்.

பிளஸ்- 2 ரிசல்ட் வெளியிட்டால் உயர்கல்வியில் சேருவது குறித்து தேவையில்லாத பதற்றம் ஏற் படும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் (சிஆர்பி எஃப்) ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர்.

பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் சிக்கியவர் களுக்கு பணமில்லா சிகிச்சை  திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் 109 வழித்தடங் களில் தனியார் ரயிலை இயக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள் ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிலிருந்தே வாட்ஸ் அப் செயலி, வீடியோ அழைப்பு மூலம்  தங்களது புகார்களை தெரிவிக்கும் முறையை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அறிமுகப்படுத்தி யுள்ளார்.