1960 - கல்வியில் பாகுபாட்டுக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பால் (யுனெஸ்கோ) நிறைவேற்றப்பட்டது. 1948இலேயே நிறைவேற்றப்பட்டிருந்த ஐநா மனித உரிமைகள் பிர கடனம், கல்வியை அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்திருந்த நிலையில், பண்பாடு, மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் கல்வி மறுக்கப்படுவதைத் தடுக்கவும், பாகுபாடின்றி ஒரே தரத்திலான கல்வி அனைத்து மனிதர்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது பிற நிலைப்பாடுகள், பிறப்பிடம், சமூக, பொருளாதார நிலைகள், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியை மறுப்பதை மட்டுமின்றி, ஒரே மாதிரியான கல்வி வழங்காமை, பிற கட்டுப்பாடுகள் ஆகியவற்றையும் இந்த ஒப்பந்தம் தடைசெய்கிறது. இந்த ஒப்பந்தத்தை எந்த நாடும் (பிற ஒப்பந்தங்களைப்போல) கட்டுப்பாடு விதித்து ஏற்க முடியாது என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பாலின அடிப்படையில் தனித்தனி கல்வி அமைப்புகள் வைத்துக்கொள்வதையும், மத, மொழி அடிப்படை களில் தனி கல்வி நிறுவனங்கள் நிறுவி, நடத்துவதையும் இந்த ஒப்பந்தம் தடைசெய்ய வில்லை. எந்தப் பிரிவினரையும் விலக்காமல், கல்வியை மேம்படுத்துவதை நோக்க மாகக்கொண்டு, தனியார் கல்வி நிலையங்கள் அமைப்பதையும் இந்த ஒப்பந்தம் அனு மதிக்கிறது. தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோரின் உரிமையை உறுதிப் படுத்துவதுடன், தேசிய சிறுபான்மையினர், தங்கள் மொழியில் தங்களுக்கான கல்வி நிலையங்களை நடத்திக்கொள்வதையும், மதக் கல்வியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதையும் இது அனுமதிக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, ஐரோப்பியக் குடியேற்றங்கள் நடைபெற்ற நாடுகளில், தொல்குடியினர், அடிமைகள் ஆகியோருக்குச் சமமான கல்வி மறுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் சிறுபான்மை இனக்குழுக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. இனக்குழு, குடியேற்றம் ஆகிய காரணங்களின்றி (சாதியால்) கல்வி மறுக்கப்பட்டது இந்தியாவில் மட்டும்தான். முகம்மதிய நாடுகளில் பாலின அடிப்படையில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. தனி மனிதர்களாக அன்றி, நிறுவனங்களே இத்தகைய பாகுபாடுகளைக் கடைப்பிடிக்கும் நாடு அமெரிக்காதான். இன்றும் கருப்பினத்தவர் பகுதிகளில் குறைவான பள்ளிகள் இருப்பதுடன், அவற்றில் பணிபுரிய வெள்ளையர்கள் மறுப்பது உள்ளிட்ட காரணங்களால், அவர்களுக்கு வெள்ளையர்களுக்கு வழங்கப்படும் தரத்திலான கல்வி வழங்கப்படுவதில்லை.
- அறிவுக்கடல்