தாய்லாந்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விவாதப்போட்டியில் இந்திய அணியினர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர்.64 நாடுகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்திய பள்ளிகள் விவாத கழகம் (ஐஎஸ்டிஎஸ்) இந்த மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை அளித்து சர்வதேச போட்டிக்கு தயார்படுத்தியது. உலகில் சிறந்த மாணவர் பேச்சாளர் என்ற பரிசுகளையும் இந்திய மாணவர்கள் பெற்றனர்.