tamilnadu

img

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து அரசு அறிவிப்பு

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 19 பேர் கரோனா வைரஸ் பாதிப்புடன் தாய்லாந்து மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய சிகிச்சையை தாய்லாந்து மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். எச்ஐவி மற்றும்  நிமோனியா காய்ச்சலுக்கான மருந்துகளை சரி விகிதத்தில் பயன்படுத்தி கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்று தாய்லாந்து மருத்துவர்கள் நிரூபித்துள்ளனர். நோய் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்கு கூட இந்த சிகிச்சையால் 48 மணி நேரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண முடிகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். தாய்லாந்தில் கரோனா வைரஸ் பாதித்த எட்டு பேரை, இதன் மூலம் குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

;