tamilnadu

img

உலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷைலஜா டீச்சர்

உலகின் டாப் 50 சிந்தனையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷைலஜா டீச்சர் இடம் பிடித்துள்ளர். 
உலகம் முழுவதும் கொனோ வைரஸைக் கட்டுப்படுத்துவது மற்றும் புதுமையான சிந்தனைகளை முன்வைத்தது குறித்த சிந்தனையாளர்களின் பட்டியலை பிரிட்டன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்  கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஊகான்  மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பாதிப்பு  உலகம் முழுவதும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில்  பரவியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும்  8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில்  தடுப்பு மருந்துகளைக் கண்டறிய உலக நாடுகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை  கட்டுப்படுத்துவது மற்றும் அவ்வைரஸ் குறித்து புதுமையான சிந்தனைகளை முன்வைத்த முதல் 50 பேர் பட்டியலை பிரிட்டனின் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து கேரளாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா முதல் இடம் பிடித்திருக்கிறார். இரண்டாவது இடம் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவில் முதலில் கேரளா மாநிலம் தான் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சமூக இடைவெளியை சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா மட்டுமல்லாது 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பரவிய நிபா வைரஸைக் கட்டுப்படுத்துவதிலும் ஷைலஜா மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்றும் பிராஸ்பெக்ட் இதழ் (Prospect Magazine) சுட்டிக்காட்டி உள்ளது.