tamilnadu

img

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு:ஒருவர் பலி -100 பேர் சிக்கி இருப்பதாக தகவல்

நியூசிலாந்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நியூசிலாந்து வடக்கு கடல் பகுதியில் உள்ள ஒயிட் ஐலேண்ட் தீவில் உள்ள எரிமலை திங்களன்று உள்ளூர் நேரப்படி 2.11 மணியளவில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 50 பேர் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுதது அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இதுபற்றி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டென் வெல்லிங்டனில் கூறுகையில், “எரிமலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட சிலர் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அந்தத் தீவிலேயே சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது” என்றார். 
“மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருந்து உரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம்.” எனவும் தெரிவித்தார். “குறைந்தது 50 பேர் எரிமலை வெடிப்பின்போது அப்பகுதியில் இருந்திருக்கலாம் எனவும் நூறு பேருக்குக் குறைவாகவே இருக்கக்கூடும்.” என மீட்புப் பணியில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.