அமெரிக்காவில் காவல் துறையினரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட்க்காக போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன் என்று நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் காவலரால் முட்டியால் 8 நிமிடங்கள் 46 நொடிகள் அழுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்திலும் அமைதிப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தொலைக்காட்சியில் தோன்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன். இது உண்மையில் பயங்கரம் நாம் பார்ப்பது பார்த்து கொண்டிருப்பது பயங்கரமாக உள்ளது. நான் உண்மையில் பயந்து போய்விட்டேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அமைதியான போராட்டத்தை நான் தடுக்க விரும்பவில்லை. ஆனால் தனிமனித இடைவெளியோடு போராட்டம் நடைபெறாததை நான் கண்டிக்கிறேன். ஒரு நாடாக எங்கு அநீதி நடந்தாலும் நாம் அதற்கு எதிராக எழுந்து நிற்போம் என தெரிவித்துள்ளார்.