tamilnadu

img

317 பயணிகளுடன் ஹாங்காங் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

தைவானில் இருந்து ஹாங்காங் புறப்பட்ட விமானம் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் அவசரமாக தரையிறங்கியது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

ஹாங்காங் நாட்டின் கதைய் டிரகன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தைவானில் உள்ள கவுசிங் என்ற நகரில் இருந்து ஹாங்காங் புறப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.02 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் 317 பயணிகள் இருந்தனர். 

இந்த நிலையில், விமானத்தின் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியானது. இதைத்தொடர்ந்து விமானம் அவசரமாக, புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச்சென்றது. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். 


என்ஜினில் இருந்து புகை வெளிவந்ததற்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் பறவை மோதியதே புகை வெளியானதற்கு காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 


;