tamilnadu

img

ஜெர்மன் மிருக காட்சி சாலையில் தீ விபத்து- 30 விலங்குகள் பலி

ஜெர்மனியில் மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஜெர்மனியின் கிரெஃபெல்ட் மிருகக்காட்சி சாலையில் நேற்று இரவு புத்தாண்டு தொடங்கும் சில மணி நேரத்திற்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த தீ விபத்து குறித்து மிருகக் காட்சி சாலை நிர்வாகம் தரப்பில், ''எங்களது மோசமான பயம் நனவாகிவிட்டது. பல விலங்குகள் இறந்துவிட்டன. நாங்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களுக்கு உதவ விரும்பியவர்களுக்கு மிக்க நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;