பாய்லர் வெடித்த விபத்து தொடர்பாக என்.எல்.சி.க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. என்எல்சியில் கடந்த ஜூலை 1-ம் தேதி பாய்லர் வெடித்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பயணியர், விமானத்தில் பறக்கும் போது அதிவேக செயற்கைக்கோள் இணையதள சேவையை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சீனா தயாரித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மதுரை, தேனூர் வைகை ஆற்றில் ஒன்றரை அடி உயர பழமையான கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து தேசியம், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நவம்பர் மாதம் வரை இலவச அரிசி, பருப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.