tamilnadu

img

குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் 

குவைத் சிட்டி 
மேற்கு ஆசிய நாடான குவைத்தில் கொரோனா வைரஸ் சீரான வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை 300-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாரும் இதுவரை பலியாகவில்லை. 80-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.  

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை குவைத் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில்," குவைத்தில் புதிதாக 28 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 இந்தியர்கள் எனவும் 2 பேர் வங்கதேசம் மற்றும் ஒருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்" எனக் கூறியுள்ளது. 

;