tamilnadu

img

அமெரிக்காவில்  கொரோனா பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது.. 

நியூயார்க் 
உலகை உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அமல்படுத்தினாலும் அங்கு கொரோனவை கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக உள்ளது. 

கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறான வேகத்தில் பரவி வருவதால் அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரத்து 923 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 15 பேராக உள்ளது. 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

;