tamilnadu

img

கொரோனா: பொருளாதார நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட  நிதியமைச்சர்

உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாமல் ஜெர்மன் மாகாண நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெர்மனி ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சராக தாமஸ் ஸ்கேஃபர் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். . 54 வயது நிரம்பிய இவர் கொனோ பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் கிடந்தது. இச்சம்பவம் ஜெர்மனியில் பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தி உள்ளது.