tamilnadu

img

86 புத்தர் கோயில் புலிகள் உயிரிழப்பு

தாய்லாந்தின் காஞ்சனா புரி பகுதியில் உள்ள புத்தர் கோயிலில் வளர்ந்த 86 புலிகள் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தின் காஞ்சனாபுரி பகுதியில் புத்தர் கோயிலில் ஏராளமான புலிகள் வளர்க்கப்பட்டன. அதனால் அந்த கோயில் புலிகள் கோயில் என்று அழைக்கப்பட்டது. ஆனால் புத்தர் கோயிலில் இயற்கைக்கு மாறாக புலிகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதாகவும் வெளிநாடுகளுக்கு புலிகள் கடத்தப்படுவதாகவும், புலிகளின் உடல் பாகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டில் தாய்லாந்து போலீஸார் புத்தர் கோயிலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 147 புலிகள் மீட்கப்பட்டு வன உயிரின பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், புத்தர் கோயிலில் இருந்து மீட்கப்பட்ட புலிகளில், 86 புலிகள் உயிரிழந்துவிட்டதாகவும் 61 புலிகள் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாகவும் தாய்லாந்து தேசிய வன உயிரியல் பூங்கா துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்"புத்தர் கோயிலில் வன விலங்குகளுக்கான சூழலில் புலிகள் வளர்க்கப்படவில்லை . வாழ்வியல் சூழல் மாறியதால் வைரஸ் பாதிப்புகளால் புலிகள் இறந்து விட்டன’’  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.