tamilnadu

img

24 மணிநேரத்தில் 1400 பேர் உயிரிழப்பு...  கொரோனாவால் திணறும் அமெரிக்கா

நியூயார்க்
200-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ளது.  

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7400 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், இன்று புதிதாக 300-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால் ஒட்டுமொத்த அமெரிக்கத் தேசமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதால் அங்கு உயிரிழப்பின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.  

உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதி கொண்ட அமெரிக்கா கொரோனா வைரஸிற்கு திணறுவதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் கண்காணித்து வருகிறது.
 

;