துருக்கியில் பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கியில் உள்ள வான் மாகாணத்தில் ஏற்பட்ட 2வது பனிச்சரிவில் சிக்கி 33 மீட்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் சுமார் 300 மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 33 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் மீட்புப்படை வீரர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி 33 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பனிச்சரிவினால் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.