வேலூர், ஆக.1- வேலூரில் திமுக வேட்பாளருக்கு வாக்குகள் கோரி ஆக.3 அன்று நடக்கும் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக் கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். வேலூர் மக்களவை தொகுதியில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கதிர்ஆனந்த் போட்டி யிடுகிறார். இவரை ஆதரித்து திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற் கொண்டு வரு கிறார். மேலும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமையுடன்(ஆக.3) பிரச்சாரம் முடிவடைவதால் வேலூர் மண்டித் தெரு வில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டணி கட்சித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, டி.கே.ரங்க ராஜன், ஆர். முத்தரசன், காதர்மொய்தீன், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.