tamilnadu

img

கொள்முதல் செய்யப்படாத நெல் மூடைகள்

விபரம் கேட்டறிந்த விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி மீதான பொய்ப்புகாருக்கு கண்டனம்

சென்னை,ஏப்.18- அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூடைகள் கொள்முதல் செய்யப் படாமல் மழையில் நனைந்து நாச மாகின. விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து நெல்கொள்முதல் செய்யப் படாதது குறித்து விபரம் கேட்டறிந்த விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் மீது பொய்ப்புகார் கொடுக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு மீது நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் வாலாஜாபாத் காவல்நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்துள்ளதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையான கண் டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொள் முதல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் சமீபத்தில் பெய்த கோடை மழையில் நனைந்து நாச மானதை தமிழகம் அறியும். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரண மாகும். மழையில் நனைந்து நெல் வீணான தற்கு காரணமான அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நெல்லுக்கான முழு தொகை யையும் அரசு வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.

நெல் கொள்முதல் இப்போதும் நடை பெறவில்லை என்று விவசாயிகள் தெரிவித்ததையொட்டி நெல் கொள் முதல் மையங்களுக்கு நேரடியாக சென்று விபரங்களை கேட்டறிந் துள்ளார். இதற்காக மூட்டைக்கு 10 ரூபாய் பணம் கேட்டார். அரசு அலுவலர்கள் பணி செய்வதை தடுத்தார் என்று அதிகாரிகளால் பொய்ப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கேவலமான இந்த செயலுக்கு வன்மை யான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக புகாரை திரும்பப் பெற அரசு தலையிடுமாறும், பொய்ப்புகார் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்து கிறது.

அத்துடன் நெல்கொள்முதல் செய்வ தற்கான சாக்கு, பணம் ஆகியவற்றை அனைத்து மையங்களுக்கும் தேவை யான அளவு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.