tamilnadu

img

அண்ணா நினைவு நாள்

சென்னை, பிப்.3- பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவி டத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். திமுக நிறுவனரும், முன்னாள் முதல மைச்சருமான பேரறிஞர் அண்ணாவின், 51ஆவது நினைவு தினம் பிப்.3 அன்று அனுசரிக்கப்படுகிறது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து, மெரினாவில் உள்ள அண்ணா  நினைவிடத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில் அக்கட்சியினர், அமை திப் பேரணி சென்றனர். இதன் முடிவில், பேர றிஞர் அண்ணா நினைவிடத்தில், மு.க.ஸ்டா லின், மலர் வளையம் வைத்தும், மலர்கள்  தூவியும் அஞ்சலி செலுத்தினார். மு.க.ஸ்டா லினைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மரி யாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  அண்ணாவின் நினைவிடத்தில், அதிமுக சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர்  கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அமைச்  சர்கள், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த நிர்வாகிகள், மலர்கள் தூவி  மரியாதை செலுத்தினர். இதேபோன்று, பேரறிஞர் அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள இல்லத்  தில், அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு  அரசின் சார்பில், அமைச்சர் பென்ஜமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக, திமுக சார்பிலும் மரியாதை செலுத்  தப்பட்டது.