tamilnadu

img

உழவன் செயலியில் பிரதமரின் நிதி திட்டம் சேர்ப்பு

சென்னை,நவ.23- உழவன் செயலியில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது. பாரதப் பிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின்கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய்,மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. தகுதியான விவ சாயிகள் தாங்களாகவே பதிவு செய்து திட்ட பலன்களை எளிதாக பெறுவதற்காக, உழவன் செயலியில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. உழவன் செயலியில், பயனாளி முன்பதிவு சேவையில் பி.எம். கிசான் திட்டத்தை தேர்வு செய்து, தகுதியான விவசாயிகள் தங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் உள்ளவாறு, விவசாயிகள் தங்கள் பெயரை மாற்றி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.