tamilnadu

img

மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுத்திடுக பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல், நவ.2- ராசிபுரம் வட்டத்திலுள்ள மூடப்படாத ஆழ் துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து  நிலையம் அருகே உள்ள முத்தமிழ் பள்ளியின் எதிரே  குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பின்றி மூடப்படாமல் உள்ளது. அதேபோல் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் இந்திராநகர் குடியி ருப்பின் அருகிலும், நாமகிரிப்பேட்டை ஒன்றியத் துக்குட்பட்ட சீராப்பள்ளி பேரூராட்சி காந்திநகர்  காலனியிலும் நகராட்சி சார்பில் ஆழ்துளைக்  கிணறுகள் அமைக்கப்பட்டன. இந்த ஆழ்துளைக்  கிணறு வறட்சியின் காரணமாக மின் மோட்டாரை எடுத்து சென்று விட்டனர். ஆனால் ஆழ்துளை கிணறுகள் மூடப்படவில்லை. இதன் அருகில் ஊராட்சி பள்ளி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.