நாமக்கல், ஜூன் 17- கொல்கத்தாவில் மருத்துவர் களை தாக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற் றும் தர்ணா போராட்டம் நடை பெற்றது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்திய தற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனை சங்கத் தினரும் இணைந்துள்ளனர். இதன்ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு டாக் டர்கள் சங்கத்தினரும், இந்திய மருத்துவ சங்கத்தினரும் இணைந்து திங்களன்று வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக நாமக் கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் ரங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத் துவர்கள் மற்றும் மருத்துவ சேவையை சேர்ந்த பணியாளர் களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதலை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மனித சங்கிலி போராட்டம்
சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் ஜன நாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதில் ஜனநாயக மருத்துவர் சங்க மாவட்ட தலை வர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.