tamilnadu

img

பெருநிறுவனங்களின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 13– சோவல் நிறுவனம் மற்றும் மெட்ரோ நிர்வாகம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் தொழிலாளர் விரோ தப் போக்கைக் கண்டித்து சிஐடியு சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  சென்னை மெட்ரோ ரயில்வே, காஞ்சிபுரம் மாவட்டம் அஸாஹி, சோவல், டாங்சன், ராயல் என்பீல்டு, மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தொழிற் சங்கம் அமைத்த காரணத்தால் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநீக்கம், 350க்கும் மேற்பட் டோர் வேலை இழப்பு, 100க்கும் மேற் பட்டோர் பணியிடை நீக்கம், இட மாற்ற பழிவாங்கல், பொய்வழக்கு நடவடிக்கைகள் உள்ளிட்டவை களை பெருநிறுவனங்கள் கைவிட வேண்டும்.  வேலையிழந்த தொழி லாளருக்கு வேலை கிடைக்க தமிழக அரசு தலையீடு செய்ய வேண்டும். தொழிலாளர் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி வியாழனன்று சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக நாமக்கல் பூங்கா சாலை முன்பு சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திர சேகரன், மாவட்ட துணைச் செயலா ளர் கு.சிவராஜ், மாவட்ட உதவித் தலைவர் எம்.ரங்கசாமி, ரயில்வே குட்செட் தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் ஏ.சரவணன், சுமைப் பணி தொழிலாளர் சங்கத் தலைவர் யோகமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.