tamilnadu

img

இலவச வேட்டி, சேலை வழங்கிடுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல். ஜன. 21- திருச்செங்கோடு அருகே எலச்சிபா ளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் இலவச வேட்டி சேலை வழங்காததை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தைப்பொங் கல் திருநாளில் தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கி வந்த னர். இந்நிலையில் அனைத்து பகுதிக ளிலும் முழுமையாக இலவச வேட்டி, சேலை பொது மக்களுக்கு வழங்க வில்லை. மேலும், பொங்கல் பரிசுத் தொகையும் முழுமையாக அனைவருக் கும் வழங்கவில்லை. இதனால், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்ப டுகின்றார்கள். எனவே, அனைவ ருக்கும் முழுமையாக இலவச வேட்டி சேலையும், பொங்கல் பரிசுத் தொகை யும் முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பி னர் கே.எஸ். வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சுரேஷ் துவக்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து ஒன்றியச் செயலாளர் சு. சுரேஷ் கண்டன உரையாற்றினர். இதில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ்.கிளை செய லாளர்கள் பி.ஜெயந்தி.வி.தேவன்.பி. கிட்டுசாமி. மற்றும் செல்வராஜ், பெரிய சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

;